குவாட்டரங்கல் கோல்ப் போட்டி திருகோணமலையில் நடைபெற உள்ளது.
இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸினால் நடாத்தப்படும் குவாட்டரங்கல் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகளுக்கிடையேயான கோல்ஃப் போட்டியை 2024 ஜூன் 29 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு அருகிலுள்ள அழகிய சீனாவராய விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கோல்ப் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி கோல்ஃப் கழகங்கள், ரோயல் கோல்ஃப் விளையாட்டு சங்கம், நுவுவர எலியா கோல்ஃப் விளையாட்டு சங்கம், விக்டோரியா கோல்ஃப் விளையாட்டு சங்கம், ஏர் ஃபோர்ஸ் ஈகிள்ஸ் லிங்க் கோல்ஃப் ஆகிய விளையாட்டு கழகம்கள்  போட்டியிடவுள்ளதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் எயார் மார்ஷல் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

ஒரு அணிக்கு 15 வீரர்களைக் கொண்ட இந்த அணி அடிப்படையிலான போட்டியானது, DIMO நிறுவனத்தின் பிரதான அனுசரணையிலும் (CATIC) நிறுவனத்தின் இணை அனுசரணையிலும் நடைபெறவுள்ளதுடன், இலங்கை வங்கி உத்தியோகபூர்வ வங்கி பங்காளியாக செயற்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை