விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல  05  தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான  நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும்  K-8 விமானம், இன்று  (மார்ச் 21, 2025) காலை குருநாகல்  வாரியபொல   பகுதியில்   பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.  விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும் , பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது  குருநாகல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில்  புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க,அவர்கள்  விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை