விமானப்படையின் விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படை விமான  பொறியியல் பிரிவிற்கு  (AEW)  புதிய கட்டளை அதிகாரி நியமனம்  (மே 29, 2025) நடைபெற்றது.  பாரம்பரியமாக விமானப்படை வளாகத்தில் ஒப்படைப்பு / பொறுப்பேற்றல் அணிவகுப்பு நடைபெற்றது , அங்கு வெளியேறும் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் MF ஜான்சன் அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி   எயார் கொமடோர் WADC விஜேசிங்கே  அவர்களிடம் உத்தியோகபூர்வமாக  கட்டளையை ஒப்படைத்தனர்.

எயார்  கொமடோர் ஜான்சன் விமானப்படை தலைமையகத்திற்குச் செல்வார், அங்கு அவர் தர உறுதிப்பாட்டு பணிப்பாளராக  பொறுப்பேற்பார்.

புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் விஜேசிங்க,அவர்கள்  விமானப் பொறியியல் பிரிவில் (AEW) செயல் கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் முன்னர்  விமானப் பழுதுபார்க்கும் பிரிவின் (AOW) கட்டளை அதிகாரியாக அவர் ஏற்கனவே பணியாற்றி வருகின்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை