விமானப்படை முதல் முறையாக பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.
முப்படை வீரர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கத்திற்காக பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டியின் சிறப்பு நிகழ்வான "பேஸ்பால் " போட்டி  சமீபத்தில் தியகமவில் உள்ள ஜப்பான் இலங்கை நட்புறவு பேஸ்பால் மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில், இலங்கை விமானப்படை பேஸ்பால் அணி திறமையை  வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவத்தை 4-2 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக 13வது பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் சாம்பியன்ஷிப்பை வென்றது.   சிறந்த  வீரருக்கான  விருதை விமானப்படையின்  கோப்ரல் சமீர சதருவன்,அவர்களும் சிறந்த பந்து வீச்சாளர் விருதை விமானப்படை முன்னணி விமானப்படை வீரர் சந்திஷ மீகோட  மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர்  விருதை கோப்ரல் சிந்தக இந்துநில்  ஆகியோர் வென்றனர்.

இந்தப் போட்டியின் விருது வழங்கும் விழாவிற்கு பிரதம விருந்தினராக இலங்கை கடற்படையின் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜி.எஸ்.டி. வீரசூரிய கலந்து கொண்டனர், அதே நேரத்தில் இலங்கை விமானப்படை பேஸ்பால் அணியின் தலைவர் எயார்  கொமடோர் சந்திமால்  ஹெட்டாராச்சி, இலங்கை இராணுவத்தின் விளையாட்டு  பிரிவு பணிப்பாளர்  பிரிகேடியர் கே.ஏ.டி.ஆர்.சி. கன்னங்கர மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் முப்படை  வீரர்கள்  கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை