டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் 100 லைஃப் ஜகெட்டுகளை நன்கொடையாக வழங்குகிறது.
டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, 2025 டிசம்பர் 03,  அன்று இலங்கை விமானப்படைக்கு 100 லைஃப் ஜகெட்டுகளை நன்கொடையாக வழங்கியது.

விமானப்படை தலைமையக வளாகத்தில் இந்த நன்கொடையின் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது, அங்கு விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் எயார்  வைஸ் மார்ஷல் தம்மிக டயஸ் மற்றும் பொது பொறியியல் இயக்குநர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் இந்திகா விக்ரமசிங்க ஆகியோர் இலங்கை விமானப்படை சார்பாக லைஃப் ஜாக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய விற்பனை ஆலோசகர் உதய பிரான்சிஸ் மற்றும் தலைமை நிதி அதிகாரி கயான் கருணாரத்ன மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை