கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் மகரந்தச் சேர்க்கைத் தோட்டம் திறந்து வைக்கப்பட்டது
மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கு வாழ்விடம், உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் நலம், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் விமானப்படையின் ஒரு செயல்மிகு முயற்சியான  “மகரந்தச் சேர்க்கைத் தோட்டம்”,  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சம்பத் ஜெயதிலகவின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தின் விவசாயப் பிரிவால் உருவாக்கப்பட்டது. இது  (10 ஏப்ரல் 2026) விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர், திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகள் போன்ற மகரந்தச் சேர்க்கை உயிரினங்களைக் கவரும் குறிப்பிட்ட தேன் மற்றும் மகரந்தத்தை உற்பத்தி செய்யும் தாவரங்களைப் பயிரிடும் நோக்கத்தில் இந்தத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பல்லுயிர்ப் பெருக்கம், முக்கிய வாழ்விடங்கள் மற்றும் செழிப்பான வனவிலங்குகளுக்கு ஆதரவளிக்க, இயற்கை மகரந்தச் சேர்க்கை உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

விமானப்படை மகரந்தச் சேர்க்கைப் பூங்கா, பல்கலைக்கழக மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை