2026ம் ஆண்டுக்கான ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
சீனாவில் நடைபெறவுள்ள 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெறவுள்ள விளையாட்டு குழுவில்  இலங்கை விமானப்படையை  சேர்ந்த  17 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர் இந்த போட்டிகள் 2026 ஏப்ரல் 22 முதல் 30 வரை இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் விமானப்படை அணியினர் , தடகளம், கைப்பந்து, கரப்பந்து, மல்யுத்தம் மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்க உள்ளது.

போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னர்  பங்கேற்கும் விமானப்படை  வீர வீராங்கனைகள்   விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன்போது  விமானப்படைத் தளபதி விளையாட்டு வீரர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்க்க பாடுபடுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை