பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று 2026 ஜூன் 22 அன்று இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தது. இக்குழுவிற்கு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பிரதிநிதியான எயார்  கொமடோர் முஹம்மது ஷெஹர்யார் தலைமை தாங்கினார். மேலும், இக்குழுவில் 12 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை விமானப்படைத் தளபதியான எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்து, பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்களை நடத்தினர். பின்னர், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் முதன்மை ஆலோசகரான எயார்  கொமடோர் நிப்புன தனிப்புலியாராச்சி அவர்களால் 'இலங்கை விமானப்படையின் பங்கு மற்றும் செயல்பாடு' குறித்து ஒரு விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. விமானப்படை மேலாண்மைச் சபையின் உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை இயக்குநரகங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் கேள்வி-பதில் அமர்வு நடைபெற்றது.

Call on the Commander

Knowledge sharing session
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை