இலங்கை விமானப்படை, கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இலங்கையின் முன்னணி வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ் (லங்கா) உடன், இலங்கை விமானப்படை 2026 ஜூன் 24 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கியா மோட்டார்ஸ் (லங்கா) சார்பாக அதன் நிர்வாக இயக்குநர் திரு. ஆண்ட்ரூ எம். பெரேராவும், விமானப்படை சார்பாக நலன்புரி பணிப்பாளர் நாயகம், எயார்  வைஸ் மார்ஷல் ரஜிந்த் ஜெயவர்தனவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், விமானப்படையின் சார்பில் சட்டப் பிரிவுப் பிரதிநிதிகள், நலன்புரி இயக்குநரகத்தின் பணியாளர் அதிகாரிகள், நிதிப் பொது மேலாளர் செல்வி நிர்மலா ஹபுவாரச்சி, உதிரிபாகங்கள் பொது மேலாளர் திரு. சலியா செமசிங்க, பணிமனை மேலாளர் திரு. தமித் என். விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை