தியதலாவ விமானப்படைப் போர்ப் பயிற்சிப் பள்ளியில் புதிய மாணவர் அதிகாரிப் படிப்புகள் தொடங்கின
தியதலாவ விமானப்படைப் போர்ப் பயிற்சிப் பள்ளியின் நேரடி நுழைவு மாணவர் அதிகாரிப் படிப்புகள் எண் 78 மற்றும் எண் 80B ஆகியவை 26 ஜூன் 2026 அன்று தொடங்கப்பட்டன. இலங்கை விமானப்படையின் பிரதித் தளபதி, எயர் வைஸ் மார்ஷல்  கிஹான் செனவிரத்ன அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்த பயிற்சியை நிறைவுசெய்த  ஏழு மாணவர் அதிகாரிகள், 40 நாள் தீவிரப் போர் மற்றும் நிர்வாகப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, விமானப்படை அதிகாரிகளாகத் தங்களது தொழில்முறைப் பயணத்தைத் தொடங்கினர்.

இப்படிப்பின் முக்கிய நோக்கம், குடிமை வாழ்வில் உள்ள இளைஞர்களை ஒழுக்கமுள்ள, தொழில்முறைத் திறனுள்ள மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்ட விமானப்படை அதிகாரிகளாக மாற்றுவதாகும். இதற்காக, அடிப்படைத் தரைப்போர் பயிற்சி மற்றும் அடிப்படை நிர்வாகப் பயிற்சி ஆகிய இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ், அணிவகுப்பு, கள நுட்பங்கள், தரைவழி நகர்வு, தந்திரோபாயங்கள், ஆயுதப் பயன்பாடு, மனித உரிமைகள், முதலுதவி, கட்டளை மற்றும் தலைமைத்துவம், அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் விமானப்படை நிர்வாகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பாடங்களில் விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

தியதலாவவில் உள்ள இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் லலித் சுகததாச மற்றும் பயிற்சி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வசந்த லட்சுமண் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது. அதேவேளையில், இந்நிகழ்ச்சியின் அமைப்பு மற்றும்  ஒருங்கிணைப்பு   கேடட் பயிற்சி தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்கொற்றன் லீடர்   மனுல பொல்கம்பொல அவர்கள்   மேற்கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை