இலங்கை விமானப்படை வருடாந்திர இந்து சமய விழாவை நடத்தியது.
இலங்கை விமானப்படையின் வருடாந்திர இந்து சமய விழா,   (28 ஜூலை 2026) கொழும்பு 10, கேப்டன் கார்டன் ஸ்ரீ கைலாசநாத  கோவிலில்  விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது  தங்கள் உயிரைத் தியாகம் செய்த விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், அனைத்து இலங்கை விமானப்படை நிறுவனங்களிலும் தற்போது பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  மற்றும் இலங்கை விமானப்படையின்  வளங்கள் மீதும்  ஆசிகள் வேண்டப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் , தலைமைத் தளபதி, பிரதி தலைமைத் தளபதி, இலங்கை விமானப்படை நிறுவனங்களின் பிரதிநிதிகளான விமானப்படை மேலாண்மைச் சபையின் உறுப்பினர்கள், கட்டளை அதிகாரிகள் , சிரேஷ்ட அதிகாரிகள்,  படைத்வரர்கள் படைவீரர்கள்  மற்றும் சிவில் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை