இரணமடு விமானப்படை தளத்தின் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
இரணமடு   விமானப்படை நிலையம், அதன் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயரத்ன அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தொடர் நினைவு நிகழ்ச்சிகளுடன்   (03 ஆகஸ்ட் 2026) தனது 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

வழக்கமான பணி அணிவகுப்புடன் ஆண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, ​​கட்டளை அதிகாரி படைத்தளத்தின்  அதிகாரிகள்,  விமானப்படை வீரர்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.  ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இரணமடு   விமானப்படை  தளத்தினால்   கிளிநொச்சி மாவட்டத்தில் பல சமூக நல முன்னெடுப்புகளை மேற்கொண்டது. இவற்றில் இரத்ததான முகாம், சமய அனுசரிப்புகள், 09 ஆம் எண் சாலையில் தூய்மைப் பணி, அப்பகுதி மாணவர்களுக்கு அத்தியாவசிய கல்விப் பொருட்கள் வழங்குதல் மற்றும் வடக்கச்சி மகப்பேறு மருத்துவமனையில் புனரமைப்புப் பணிகள் ஆகியவை அடங்கும்.

அனைத்துத் தரப்பினருக்கான  மதிய விருந்துடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.  அதனைத் தொடர்ந்து, நிலையப் பணியாளர்களிடையே நடைபெற்ற ஒரு நட்புரீதியான கிரிக்கெட் போட்டி நிகழ்வும் இடம்பெற்றது 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை