இலங்கை விமானப்படை விளையாட்டு வீராங்கனைகளை காண ஊக்கமூட்டல் இரண்டாவது அமர்வு நிகழ்வு
 இலங்கை விமானப்படை  பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக இரண்டாவது அத்தியாயமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊக்கமூட்டல் நிகழ்வு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன

அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏக்கல விமானப்படை தளத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந்த இடம் பெற்ற முழு நாள் நிகழ்ச்சியினை ஃபோனிக்ஸ்பெயர்  நிறுவனத்தின் ஊறுகியப்பாளரும்  பிரதான முகாமையாளர்  திரு பாத்தியா அறுத்நாயக அவர்கள் நடத்தினார்


 இந்த நிகழ்வில் 96 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் பங்கு பற்றியதுடன் வரவிருக்கும் 12 வது தேசிய பாதுகாப்பு விளையாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கு தயாராகும் வகையில் வீர வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை அதற்கான வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது

 இதன் போது சர்வதேசரீதியில் புகழ்பெற்ற வலைப்பந்தாட்ட வீராங்கனை ஆன இலங்கை விமானப்படை  வலைப்பந்தாட்ட வீராங்கனை சதுரங்கி ஜெயசூர்யா அவர்கள் இதன்போது நன்றி உரை நிகழ்த்தினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை