இலங்கை விமானப்படை வெற்றிகரமான தலைமுறையைக் கொண்டாடுகிறது
3:23pm on Monday 6th May 2024
73 வருட வியர்வை, இரத்தம் மற்றும் கண்ணீரின் பெருமையுடன் நாட்டிற்கு தன்னலமின்றி சேவையாற்றும் இலங்கை விமானப்படையின் மகன்கள் மற்றும் மகள்கள் நாட்டிற்கு ஆற்றிய உன்னதமான மற்றும் கௌரவமான சேவையை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கொக்டெய்ல் வரவேற்பு நிகழ்வு கடந்த

2024  மார்ச் 02 ம் திகதி அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு  இராஜாங்க  அமைச்சர் கௌரவ.பிரமித பண்டார தென்னகோன் கலந்துகொண்டார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி திருமதி இனோகா ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதியுடன் இணைந்து விமானப்படைத் தளபதியினால் முன்மொழியப்பட்ட சிற்றுண்டிகளை வழங்கி ஆண்டுவிழா கேக்கை வெட்டினர்.சிப்மங்க்ஸ், பிடி-6 பயிற்சி விமானம், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பைலட் கருவிகள் உள்ளிட்ட விமானப்படை விமானங்களால் இந்த விழா சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.

விமானப்படையின் முன்னாள் தளபதியான மார்ஷல் ஒப்பி தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, அவர்களது மனைவிகள், முன்னாள் விமானப்படை தளபதிகளான   எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் எயார் சீப் மார்ஷல் ககன் புலத்சிங்கள, சிறப்பு விருந்தினர்கள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை