2024ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை கயிறிழுத்தல் போட்டிகள்.
5:52pm on Thursday 23rd May 2024
விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை கயிறிழுத்தல்   சாம்பியன்ஷிப் 2024 மார்ச் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. பரிசளிப்பு விழா 2024 மார்ச் 23 அன்று கட்டுநாயக்க வைத்தியசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன் பணிப்பாளர் நாயகம் நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் 26 வது படைப்பிரிவும், பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை அனுராதபுரம் விமானப்படை தளமும் வென்றன.

விமானப்படை கயிறுழுத்தல் சம்மேளன  தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கே.சி.கீதப்பிரிய, கட்டுநாயக்க விமானப்படைத் தள கட்டளை  எயார் வைஸ் மார்ஷல் எஸ்.டி.ஜி.எம்.சில்வா, விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் டபிள்யூ.ஏ.எஸ்.பி.வீரசேகர, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளும் கலந்துகொண்டனர் .
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை