பலாலி விமானப்படைத் தளமானது வட மாகாண வைத்தியசாலைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வை நடத்துகிறது.
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த விநியோக தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் யாழ் பிராந்திய இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பலாலி விமானப்படை தளத்தில் இரத்த தான நிகழ்வு நடத்தப்பட்டது. விமானப்படையின் பலாலி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத்தின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பலாலி விமானப்படை  தளத்தின் அதிகாரிகள், ஏனைய பதவிகள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர். சுகாதார சேவைகள் இயக்குநரகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை