இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இந்திய விமானப்படையின் பாதுகாப்புப் படைத் தலைவரும், இந்திய தலைமைப் பணியாளர் குழுவின் (CISC) தலைவருமான எயார்  மார்ஷல் அசுதோஷ் தீட்சித், 2025 ஜூன் 05,  அன்று விமானத் தலைமையகத்தில் எயார்    மார்ஷல்   பந்து   எதிரிசிங்க அவர்களை  சந்தித்தார்.

முடிவடைந்த இந்திய-இலங்கை பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிறகு, எயார்  மார்ஷல் தீட்சித் இலங்கைக்கு விஜயம் செய்து, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க, விமானப்படை தளபதியை சந்தித்தார்.  பிராந்திய விமானப்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சித் திட்டங்கள், தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் மற்றும் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்திய விமானப்படைத் பிரதானி விமானப்படை  தலைமை தளபதி  எயார்  வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, எயார்  வைஸ் மார்ஷல் தேசபிரிய சில்வா மற்றும் விமானப் பொறியியல் இயக்குநர் ஜெனரல் எயார்  வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரத்ன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இணைந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை