2025 ஆம் ஆண்டுக்கான இடைநிலை கயிறுழுத்தல் சாம்பியன்ஷிப்
2025 ஆம் ஆண்டுக்கான  விமானப்படை தலங்களுக்கு இடைநிலை கயிறுழுத்தல்  சாம்பியன்ஷிப்  ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகியதிகதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. விருது வழங்கும் விழா நேற்று 2025 ஆகஸ்ட் 14,  கட்டுநாயக்கவில் உள்ள மருத்துவமனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் இயக்குநர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார்.

ஆண்கள் பட்டத்தை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் 26 வது படைப்பிரிவு பிரிவும், பெண்கள் பட்டத்தை கட்டுநாயக்க விமானப்படை தளமும் வென்றன.  ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளமும், அனுராதபுர விமானப்படை தளமும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.

கட்டுநாயக்க விமானப்படை தளத் கட்டளை  எயார் கொமடோர் அசேல ஜெயசேகர,  கட்டுநாயக்க விமானப்படை தளத் பிரதி கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் துஷான் விஜேசிங்க, விமானப்படை கயிறுழுத்தல் போட்டித் தலைவர் குரூப் கேப்டன் சமிந்த ஹேரத், விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் இறுதிப் போட்டிகள் மற்றும் விருது வழங்கும் விழாவைக் காண கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை