இலங்கை விமானப்படையின் விமானநிலைய முகாமின் 12 வது நிறைவு விழா

இலங்கை விமானப்படையின் விமானநிலைய முகாமானது தனது 12வது நிறைவு விழாவினை அண்மையில் கொண்டாடியது.இம்முகாமானது பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் 1998ம் ஆண்டு'எயார் கொமடோர் ' எம்.எல்.கே. பெரேராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வினையொட்டி 11- 01- 2011ம் திகதியன்று 'சாந்த ஜோஸப்'முதியோர் இல்லம்,'உன்னாருவ' சிறுவர் இல்லம்,'யடியன 'சிறுவர் இல்லம்  மற்றும் விஜேய குமாரதுங்க ஞாபகர்த்த வைத்தியசாலை போன்ற இடங்களில்சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,அவர்களுக்கான  விருந்துபசாரமும் எற்பாடு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் இவ்விழாவுக்காக ஒரு சிறப்பு அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் இதனை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' பீட்ரசன் பெர்னான்டுஅவர்கள் ஏற்றுக்கொண்டார்,இதனைத்தொடர்ந்து மரநடுகை வைபவம்,விளையாட்டு நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றமையினால் விழா மேலும் சிறப்பாக அமைந்தது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.