சீகிரிய விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை - 2011.

இலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 24.06.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையை அடுத்து சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" சமிந்த சில்வா அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அத்தோடு இப்பரிசோதனையின் போது விமானப்படைத்தளபதியினால் புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட அதிகாரிகளின் ஓய்வறை ,முகாமின் தலைமை காரியாலயம் ,குளிரூட்டப்பட்ட கோப்ரல் மற்றும் ஏனைய படை உறுப்பினர்களின் சாப்பாட்டு அறை  ,முகாமின் வேலைத்தளம்,நலன்புரி வர்த்தக நிலையம் ,சேவா வனிதா ஆடைத்தொழிற்சாலை என பலவற்றையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக விமானப்படைத்தளபதி அனைவரினதும் ஒன்ருகூடலுடன் பகல் மதிய போஷனம் உட்கொண்ட அதேநேரம் ,சீகிரிய முகாமின் மாகோ கிளை முகாமினையும் பார்வையிட்டமையும் விஷேட அம்சமாகும்.





Mahaoya Visit


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.