மகளிர் உதைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படைக்கு இரண்டாம் இடம்.

மகளிர் திறந்த உதைப்பந்தாட்டப்போட்டியில் இலங்கை விமானப்படை முதன்முறையாக இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் போட்டியானது இலங்கை தரைப்படையுடன் பம்பலப்பிடி பொலிஸ் பூங்கா மைதானத்தில் கடந்த 01.08.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

மேலும் விமானப்படையானது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முதற்சுற்றில் மதகம விளையாட்டு கழகத்தினை 8-0 எனும் புள்ளி வித்தியாசத்திலும் ,கண்டி விளையாட்டு கழகத்தினை 5- 1 எனும் புள்ளி வித்தியாசத்தினாலும் வெற்றிபெற்ற அதேநேரம் காலிறுதிப்போட்டியில் குருநாகல் அணியினை 3-0 எனும் புள்ளி வித்தியாசத்திலும் அரையிருதிப்போட்டியில் பொலிஸ் அணியினை 1-0 எனும் புள்ளி வித்தியாசத்தினாலும் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் இறுதிப்போட்டியில் 1-0 எனும் புள்ளிவித்தியாசத்தினால் தரப்படையிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

எனவே இங்கு பிரதம அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திருமதி. ரஞ்சனி ஜயகொடி ,கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.கிரிஷாந்த பெரேரா ,பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அநுர சில்வா ,மகளிர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் .ஒலீவியா கமகே உட்பட விமானப்படை கால்பந்தாட்ட கழகத்தின் தலைவர் "குறுப்ப்கெப்டென் " சமன் கொடகே என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.