இலங்கை விமானப்படை கொடி ஆசீர்வாதம் பெரும் நிகழ்வு புனித 'ஜெய ஸ்ரீ மஹா போதி' யில் இடம்பெற்றது.

73 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படை பாரம்பரிய கொடி ஆசீர்வாத விழா  2024 மார்ச் 14 அன்று  அனுராதபுரம் புனித "ஜெய ஸ்ரீ மஹா போதி" இல் நடத்தியது. இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உட்பட அனைத்துபடைத்தள  கட்டளை , கல்விப்பீட கட்டளை அதிகாரிகள்,  கலந்து கொண்டனர்.

முழு இலங்கை விமானப்படையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனுராதபுரம் விமானப்படை தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விமானப்படை பதவிநிலை பிரதானி , பிரதிப் பதவிநிலை பிரதானி , விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், ஏனைய பதவிகள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.