2024ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை கயிறிழுத்தல் போட்டிகள்.

விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை கயிறிழுத்தல்   சாம்பியன்ஷிப் 2024 மார்ச் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. பரிசளிப்பு விழா 2024 மார்ச் 23 அன்று கட்டுநாயக்க வைத்தியசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன் பணிப்பாளர் நாயகம் நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் 26 வது படைப்பிரிவும், பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை அனுராதபுரம் விமானப்படை தளமும் வென்றன.

விமானப்படை கயிறுழுத்தல் சம்மேளன  தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கே.சி.கீதப்பிரிய, கட்டுநாயக்க விமானப்படைத் தள கட்டளை  எயார் வைஸ் மார்ஷல் எஸ்.டி.ஜி.எம்.சில்வா, விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் டபிள்யூ.ஏ.எஸ்.பி.வீரசேகர, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளும் கலந்துகொண்டனர் .
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.