இன்டர்-யூனிட் ஜூடோ சாம்பியன்ஷிப் 2024

 விமானப்படை தளங்களுக்கு  இடையிலான  ஜூடோ சாம்பியன்ஷிப் 02 செப்டம்பர் 2024 முதல் 04 செப்டம்பர் 2024 வரை விமானப்படை கட்டுநாயக்க   உள்ளக விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பயிற்சிப் பணிப்பாளர் வைஸ் மார்ஷல் டி.ஐ. பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை அனுராதபுரம் விமானப்படை தளமும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தளமும், ஒட்டுமொத்த மகளிர் சாம்பியன்ஷிப்பை கட்டுநாயக்க விமானப்படை தளமும்,  இரண்டாம் இடத்தை ரத்மலான விமானப்படையும் வென்றன.

விமானப்படை ஜூடோ அணியின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் டி.பி.வி வீரசிங்க, கட்டுநாயக்க விமானப்படை தள தளபதி எயார் வைஸ் மார்ஷல் எஸ்.டி.ஜி.எம் சில்வா, விமானப்படை ஜூடோ அணியின் செயலாளர் குரூப் கப்டன் எம்.ஏ.டி.சி. குணசிங்க உட்பட கௌரவ அதிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.