இலங்கை விமானப்படையின் காற்றாடி விமானங்கள்(Helicopters) அனர்த்த நிவாரனப்பணிகளில்.

இலங்கை விமானப்படையின் 'பெல்212' காற்றாடி விமானம் மூலம் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் சிக்குண்ட 54 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் இவர்களில் 32 நபர்கள் தம்பிடிய பிரதேசத்தையும்,ஏனையோர் போகம்யாய,  ரம்புக்கன் ஒய,வாழைச்சேனை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அதேநேரம் விமானப்படையின்' எம்.ஐ.17' எனும் காற்றாடி விமானம் மூலம் தொப்பிகல பிரதேசத்திற்கு  இன்று காலை ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதுடன்,மேலும் 'பெல் 212' காற்றாடி விமானம் மூலம் கற்பினித்தாயொறுவர் வாழச்சேனையில் இருந்து பொலந்நறுவைவைத்தியச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்பதும் விஷேட அம்சமாகும்.

இப்பணியானது நேற்று மதியம் தொடக்கம் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் பல நிவாரணப்பணிகளை மேற்கொள்ள விமானப்படையானது தயார்நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க
விடயமாகும்.









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.