இலங்கை விமானப்படை தனது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வான் மற்றும் விண்வெளி சக்தி கோட்பாட்டின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டது.
இலங்கை விமானப்படை, வான் மற்றும் விண்வெளி சக்தி கோட்பாட்டின் மூன்றாவது பதிப்பை 2026 மார்ச் 02 அன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உள்ள அஸ்திரா சினிமா மண்டபத்தில் வெளியிட்டது. இக்கோட்பாட்டின் முதல் பிரதியை, திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் தேஷப்ரிய சில்வா, விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில், விமான நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் தம்மிகா டயஸ் மற்றும் விமானப்படை அகடமி கட்டளை அதிகாரியும், கோட்பாட்டுத் திருத்தக் குழுவின் உறுப்பினருமான எயார் கொமடோர் அமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை விமானப்படை, தேசியப் பாதுகாப்பிற்காக வான் சக்தியைப் பயன்படுத்துவதற்கான அடிப்படையை வழங்கும் தனது முறையான கோட்பாட்டுக் கட்டமைப்பை 2018-ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. 2022-ல் வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பு, செயல்பாட்டு அனுபவத்தையும் உலகளாவிய வான் சக்தி கருத்துகளையும் இணைத்து இந்தக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தியது. சமீபத்திய பதிப்பு, மாறிவரும் பாதுகாப்புச் சவால்களைக் கையாள்வதன் மூலம் அதன் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துகிறது, மேலும் முதன்முறையாக விண்வெளிச் செயல்பாடுகளை முறையாக ஒருங்கிணைக்கிறது.
இந்தப் பதிப்பு, இலங்கையின் தேசிய நலன்களையும் பிராந்தியப் பாதுகாப்பையும் வலியுறுத்துகிறது; குறிப்பாகக் கடல்சார் கள விழிப்புணர்வில் கவனம் செலுத்தி, நாட்டின் கடல்வழிப் பாதைகள் ஆற்றிவரும் முக்கியப் பங்கை எடுத்துரைக்கிறது. முதன்முறையாக, இந்தக் கோட்பாடு விண்வெளிச் செயல்பாடுகளை முறையாக உள்ளடக்கி, தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், உளவு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் விண்வெளி சார்ந்த திறன்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. வான் மற்றும் விண்வெளி சார்ந்த கண்ணோட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், இது வளர்ந்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை வலுப்படுத்துவதோடு, பிராந்திய நிலைத்தன்மைக்கும் பங்களிக்கிறது.
மூன்றாவது பதிப்பு, தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான டாக்டர் பி. சனத் பனவன மற்றும் டாக்டர் லேஷன் உக்கல்லே ஆகியோர், விண்வெளிச் செயல்பாட்டுக் கூறுகளை வடிவமைப்பதில் முக்கிய நிபுணத்துவத்தை வழங்கினர். அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு ஆளுகைக்கான நிறுவனமும் (ISG) தொழில்முறை வழிகாட்டுதலையும் மூலோபாயப் பார்வையையும் வழங்கியது.



இந்தப் பதிப்பு, இலங்கையின் தேசிய நலன்களையும் பிராந்தியப் பாதுகாப்பையும் வலியுறுத்துகிறது; குறிப்பாகக் கடல்சார் கள விழிப்புணர்வில் கவனம் செலுத்தி, நாட்டின் கடல்வழிப் பாதைகள் ஆற்றிவரும் முக்கியப் பங்கை எடுத்துரைக்கிறது. முதன்முறையாக, இந்தக் கோட்பாடு விண்வெளிச் செயல்பாடுகளை முறையாக உள்ளடக்கி, தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், உளவு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் விண்வெளி சார்ந்த திறன்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. வான் மற்றும் விண்வெளி சார்ந்த கண்ணோட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், இது வளர்ந்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை வலுப்படுத்துவதோடு, பிராந்திய நிலைத்தன்மைக்கும் பங்களிக்கிறது.
மூன்றாவது பதிப்பு, தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான டாக்டர் பி. சனத் பனவன மற்றும் டாக்டர் லேஷன் உக்கல்லே ஆகியோர், விண்வெளிச் செயல்பாட்டுக் கூறுகளை வடிவமைப்பதில் முக்கிய நிபுணத்துவத்தை வழங்கினர். அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு ஆளுகைக்கான நிறுவனமும் (ISG) தொழில்முறை வழிகாட்டுதலையும் மூலோபாயப் பார்வையையும் வழங்கியது.


